கற்க இலக்கியம்
- Get link
- X
- Other Apps
இலக்கியம் சோறு போடுமா ???? !!!!
யார் சென்னது?
யாரும் இல்லை; அதுவே யாரும் ஆகி,
ஆகச் சிறந்த நானாகி,
என்னுள் உறைந்து; உண்டு;
உறங்கி,உளவி,வினவி,
கற்று, கண்டதை அறிந்து,
அறிதலில் தெளிந்து,
தெளிந்ததில் உணர்ந்து,
உணர்ந்ததில் மிதந்து,
மிதந்ததில் சுகந்து,
சுகப்பதில் கரைந்து, கலைத்து,
காண்பவை எல்லாம் காட்சிகள் ஆகி,
காட்சிகளே காலப் போக்கில்,
மறைந்து, மறைந்து,மறைந்து,
உலவியில் கற்று,
உண்மை உணர்ந்து,
உணர்வில் இருந்து,
மீண்டும், மீண்டும், மீண்டும்,
பழகி,பழகி,பழகி,
பழகிக்கத்தில் உண்டான சுவை,
இலக்கியம் என்று உணரும் போது,
நான் அவனே !!!!
அவன் எவனோ என்று இல்லாமல்;
என்னுள் கரைந்த கால வெள்ளம்,
இலக்கியம்.
சோறு என்ற இலக்கியத்தில்,
பிச்சைக்கு இடமில்லை,
எடுக்க,எடுக்க குறைவில்லாமல்,
கொடுத்துக்கொண்டே இருக்கும்,
அமுத சுரபி.
அப்படியே இல்லாமல்,
எப்படியும் இல்லாமல்,
இப்படித்தான் என்று சொல்லலாம்;
கொண்றவற்றை எல்லாம்;
கொடுக்கும் பேராற்றல் என்கிற
பரம்பொருள் இலக்கியம் என்று
கொள்க.
வாழ்க என்று வாழ்த நான் என்ன பரம்பொருளா , அந்த பரம்பொருளும்
இலக்கியமே என்று என் உள்ளம்
உரைக்கிறது.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment